இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு முன்னதாக 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.