இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான இறுதி தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் மற்றும் கோடை வெயில் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.