தமிழகத்தில் தற்போது 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை முடித்து ஏப்ரல் 2-ஆம் வாரம் முதல் கோடை விடுமுறை விட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. ஆகையால் ஏப்ரல் மாதம் இறுதி வரை வகுப்பு நடத்தாமல் விரைவில் தேர்வுகளை முடித்து விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.