தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன் பிறகு அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.