சென்னையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் 20 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகர காவல் ஆணையம் சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாம்பரம் மாநகர காவல் ஆணையத்தை சொந்த கட்டிடத்தில் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

அதாவது மேலக்கோட்டையூரில் இருக்கும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு தாம்பரம் மாநகர காவல் துறை அரசிடம் அனுமதி கோரியது. இதற்கு தமிழக அரசும் தற்போது அனுமதி கொடுத்துள்ளது. மேலும் டிஜிபி  சைலேந்திரபாபு இனி தாம்பரம் மாநகர காவல் ஆணையம் மேலக்கோட்டையூருக்கு மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.