இன்று மதுரையில் சித்திரை திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது வைகை ஆற்றில் மூழ்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரை திருவிழாவுக்கு வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, தடுப்பணையில் குளித்த திருநகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார், மற்றொரு நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.