தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதற்கு  தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இதில் சூர்யா, காட்டார், முக்காட்டார், அரத்தார், மாண்டாங்கர், பெருமனத்தார் என 5 கேரக்டர்களில் நடிப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.மேலும் இப்படம்  10 மொழிகளில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுக்கப்பட்டது. இதனையடுத்து படத்தின் பீரியட் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட இருப்பதாகவும், வருகிற 2024-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் இந்த படம் முழுவதும் முடிக்கப்படும். இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.