எல்ஐசி நிறுவனம் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு விதமான நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியில் உள்ள ஜீவன் சாரால் பாலிசி திட்டம் சேமிப்பு மற்றும் பணத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் ஒருவேளை பாலிசிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக இறந்து விட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு பலன் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர முறையில் பிரீமியம் தொகையை செலுத்தலாம். உதாரணமாக இந்த திட்டத்தில் 30 வயதுடைய நபர் 10 லட்ச ரூபாயை பாலிஸியாக செலுத்துவதற்கு 20 வருடங்களை தேர்வு செய்கிறார் என்றால் முதிர்வுக்கு பிறகு அவர் 15.5 லட்சம் ரூபாயை லாபமாக பெறுவார்.