இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை 3 கி.மீ. சாலையை மறு சீரமைத்தல், பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கு புதிய இல்லம், அலுவலகம், துணை ஜனாதிபதிக்கு புது இல்லம் போன்றவை கட்டுவதும் “சென்டிரல் விஸ்டா” மறுசீரமைப்பு திட்டத்தில் அடங்கும்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும், பிரதமர் அல்ல என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். வருகிற மே 28ஆம் தேதி புது நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள சூழலில், ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.