தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான முனுசாமி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முனுசாமியை வீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.