திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் டியூஷன் எடுப்பதாக கூறி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் பிரகாசுக்கு 20 ஆண்டுகள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் மாணவிக்கு 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.