ஆந்திர மாநிலத்தில் இருந்து துவரம்பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர்ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.