கடலூர் மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழேந்தி (15) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழேந்தி செல்போனில் கேம் விளையாடி உள்ளார். இதனை பார்த்த பாஸ்கரன் தனது மகனை கண்டித்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழேந்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.