வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி, எனக்கு இதுல எந்த மன உளைச்சலும் இல்லை. அவர் மலை போல நிற்கும்போது,  எங்களுக்கு என்ன மன உளைச்சல் ? அதெல்லாம் ரொம்ப இது பண்ணுவாங்க….  அவங்க ஒரே ஒரு இடத்துல அவங்க என் மேல கோவப்பட்டாங்க…  குரவளைய புடிச்சுகிட்டு சொல்றேன்….

ச்சீ இவ்வளவு பெண்கள் இருக்குற கொல்லைல உனக்க்கு பழகுறதுக்கு   ஒரு பொம்பள புடிச்சி இருக்கா பாரு ? அன்னைக்கு தான் எனக்கு திட்டு விழுந்துச்சு. அதுக்கப்புறம் அவங்க இதெல்லாம் தைரியமா இரு  பார்த்துக்கலாம். அத பத்தி பேசுறதே இல்ல எங்க வீட்டுல… மூன்று நாட்களாக மனைவி ஸ்டேட்டஸை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்ன காரணம் என கேள்வி எழுப்பிய போது, கேளுங்க கேளுங்க என கயல்விழி சொல்ல,  மனைவி ஸ்டேட்டஸ்   யாரும் குறுக்க வராதீங்க. கமிட்டட் என்று கலகலப்பாக பிரஸ்மீட் மாறியது.