சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரஸ்வதி என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கடாஜலபதி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை கையில் பெட்ரோல் கேனுடன் வெங்கடாஜலபதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வெங்கடாஜலபதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.