புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சிபட்டியில் பொன்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இலுப்பூர் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது முருகேசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையா மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பொன்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.