சேலம் மாவட்டத்தில் உள்ள முகமது புறா பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று 10 பரோட்டா வாங்கியுள்ளார். அதற்கு கூடுதலாக குழம்பு கேட்ட போது கடை மேலாளர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அப்போது ஷாஜகானின் தரப்பினரும், கடை உரிமையாளரின் தரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இருதரப்பைச் சேர்ந்த 8-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.