இந்திய நாடாளுமன்றத்தில் 75 வருட கால பயணம், அதில் கிடைத்த அனுபவங்கள், பல்வேறு சாதனைகள் மற்றும் மைல்கல்கள் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்பிலே விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில் பங்கேற்று முதல் பேச்சாளராக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பிரதமர் மட்டுமல்லாமல் மக்களவையிலே லீடர் ஆப்த ஹவுஸ் என்ற பொறுப்பிலும் பிரதமர் மோடி இருக்கிறார். ஆகவே அவர் முதல் பேச்சாளராக பேச வேண்டும் என்பது ஆளும் கூட்டணியின் விருப்பம். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.
அதேபோலவே மாநிலங்களவையிலே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த விவாதத்தை தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளிலுமே நாடாளுமன்றத்தின் 75 வருட பயணம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்துக்காக தான் இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது என அரசு தரப்பினையை தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், வேறு ஏதேனும் மறைமுகமாக …. திடீரென எடுக்கக்கூடிய நடவடிக்கை இருக்குமா ? என எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.