தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தன் ரசிகர்களை  மகிழ்விக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். இதனால் Deverasanta எனும் பெயரில் கடந்த 5 வருடங்களாக இதை அவர் செய்து வருகிறார். அதன்படி நடப்பு ஆண்டு தேர்ந்தெடுக்கப்படும் 100 ரசிகர்களை தன் முழு செலவில் சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும், சுற்றுலாவுக்கான இடம் ஏற்றது எது என தேர்வு செய்ய தனக்கு உதவி செய்யுமாறும் கடந்த 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கூறியபடி தன் 100 ரசிகர்களளை மணாலிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தேர்வான ரசிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள அவர், ரசிகர்கள் விமானத்தில் மகிழ்ச்சியாக போகும் வீடியோவையும் அவர்கள் தங்குவதற்கு ஆடம்பரமான ஓட்டல் விடுதியை பதிவுசெய்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.