நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசனகுடி லட்சுமி நகரில் இருக்கும் வீட்டிற்குள் நாகப்பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சிங்கரா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற சிங்கரா வனத்துறையினர் முரளி என்பவரது உதவியுடன் சுமார் 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு அடர்ந்து வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!
Related Posts
“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more