திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பழனி புதுக்குடி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவரஞ்சனி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் உமா கூலி வேலைக்கு சென்று தனது மகளை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வேலையின்றி தவித்த உமா தனது மகளை மேற்கொண்டு படிக்க வைக்கவில்லை. இதனையடுத்து இயல்பு நிலை திரும்பியவுடன் கூலி வேலைக்கு சென்ற உமா தனது மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில் தன்னுடன் படித்த மாணவிகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து தன்னையும் படிக்க வைக்குமாறு சிவரஞ்சனி கூறியுள்ளார். அதற்கு உமா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிவரஞ்சனி தனது வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.