தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் காதலிப்பதாக கூறியுள்ளார். அந்த மாணவன் அடிக்கடி சிறுமிக்கு தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மாணவனை கைது செய்தனர். இதனையடுத்து மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.