சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி(4), லட்சுமி(2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்த போது நந்தினி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஸ்விட்ச் போர்டில் சொருகி வைத்திருந்த கொசு மருந்து திரவத்தை லட்சுமி எடுத்து குடித்ததாக தெரிகிறது.

இதனால் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த லட்சுமியை பார்த்து நந்தினி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு லட்சுமி பரிசோதனை செய்த டாக்டர்கள் லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.