சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் ஆறு வயதில் மகனும் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களாக ரஞ்சித் குமார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் இருக்கும் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் மெக்கானிக்கை வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ரஞ்சித் குமார் தண்ணீர் குழாய் மூலம் இருசக்கர வாகனம் ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ரஞ்சித் குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.