சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வடகரை முதல் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் இவர் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் அதிகமானதால் கார்த்திக் சோழிங்கநல்லூரில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று நகைகளை கேட்டுள்ளார். இதனையடுத்து நகைகளை தன்னிடம் கொடுக்கவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

சிறிது நேரத்தில் கார்த்திக் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.