அசாம் மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் மக்கள் பலர் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் அம்மாநில பேரவை தலைவர் பிஸ்வாஜித் தைமாரி மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதாவது அனைவரும் மின்விசிறியை ஆப் செய்துவிட்டு மரத்தடியில் உட்காருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதால் அவர்கள் கட்டணத்தை அதிகரிக்கும் போது அரசு என்ன செய்யும். அரசு நிலைமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.