ராஜஸ்தானில் ஏழை குடும்பத்தினருக்கு ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500 என்ற மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டார். ராஜஸ்தானில் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை தற்போது, ரூ.1,050 ஆக உள்ள நிலையில், உஜ்வாலா திட்ட பயனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு மானிய விலையிலான இந்த ரூ.500க்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

அதனபடி கடந்த ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, இன்று முதல் 500க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திரா காந்தி எரிவாயு சிலிண்டர் திட்டத்தின் கீழ் சுமார் 14 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் ஒரு சிலிண்டருக்கு 640 மானியம் வழங்கப்படும் எனவும் கூறினார்.