அரசாங்கம் சென்ற மார்ச் 31 வெள்ளிக்கிழமை பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தியுள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1% மற்றும் 4 சதவீதமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மற்ற சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதமானது 0.1% முதல் 0.7% வரை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் தேசிய சேமிப்பு சான்றிதழின்(என்எஸ்சி) வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.7% ஆக அதிகரித்து உள்ளது.

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக துவங்கப்பட்ட சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) போன்றவற்றின் வட்டி விகிதம் முறையே 8.2% (8 சதவீதத்தில் இருந்து) மற்றும் 7.5% (7.2 சதவீதம் வரை) அதிகரித்துள்ளது.

இதனிடையே சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும். தபால் நிலையங்களிலுள்ள ஒன் இயர் டெர்ம்-டெபாசிட் ஆனது 6.8% (6.6 சதவீதம் வரை), 2 வருடங்களுக்கு 6.9% (6.8 சதவீதம் வரை), 3 ஆண்டுகளுக்கு 7% ( 6.9 சதவீதம்) மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீதம் (7 சதவீதம்) வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், சேமிப்பு வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும் இருக்கிறது.