ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது “அருந்ததியினர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்” என்று சீமான் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை சீமான் கைது செய்யப்படாததை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

முன்பாக ஆதித்தமிழர் பேரவை சார்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும். மேலும் இதுபோல் சாதி கலவரத்தை தூண்டும் அடிப்படையில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.