கேரளாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் எலி தங்க நெக்லஸை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள நகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கடையின்  சிசிடிவி காட்சியை ஆராய்ந்தனர்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் கடையின் சீலிங் வழியே உள்ளே புகுந்த எலி ஒன்று லாபகமாக தங்க நெக்லஸை வாயில் கவ்விக்கொண்டு சென்று விடுகின்றது. இதனை கண்ட கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது எலி நகையை கவ்விச் செல்லும் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகின்றது.