லக்னோவில் இருந்து கொல்கத்தா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் லக்னோ நகரில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று கொல்கத்தா நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் விமானம் உயரே எழும்பிய சிறிது நேரத்தில் அதன் மீது பறவையொன்று மோதி உள்ளது.

இதனால் உடனடியாக மீண்டும் லக்னோ விமான நிலையத்திற்கே விமானம் திரும்பியது. இதில் விமானம் மற்றும் விமானத்தில் பயணித்த யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது விசாரணை மற்றும் பரிசோதனை நடைபெற்றது. இதை அடுத்து பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் விமான நிறுவனம் ஈடுபட்டது.