பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் அவருடைய மும்பை அப்பார்ட்மெண்ட் பாத்ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 32. மாடலாக வாழ்க்கையை தொடங்கியவர் அதனை தொடர்ந்து சீரியல்கள் மற்றும் விளம்பரங்கள் என சினிமா தொடர்பான பல தொழில்கள் செய்து வந்தார்.

அவர் மும்பையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நிலையில் அவருடைய வீட்டிற்கு நேற்று எதர்ச்சியாக சென்ற நண்பர் அவரை பிணமாக பார்த்திருக்கிறார். அதிகப்படியான போதைப்பொருள் உயிரைக் குடித்திருக்கலாம் என்றும் முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.