தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியை இன்னும் நீங்காது நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கள்ள சந்தையில் மது வாங்கி குப்புசாமி (60) என்ற முதியவர் நேற்று உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவேக் என்ற வாலிபரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜகவினர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போராட்டக்காரர்களை கலைத்தார். மேலும் அங்கிருந்த மது பாட்டில்களை பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.