இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று பங்குச்சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் அளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிந்துள்ளது.

அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 422 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்த சரிவால் ஒரே நாளில் 14 லட்சம் கோடி இழப்பு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அனைத்து முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 385,64,000 கோடியாக இருந்த நிலையில் நேற்றைய சரிவை தொடர்ந்து 371,69,000 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.