கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் 40 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் நிகில்(21) என்பவரும் வசித்து வருகிறார். அவர் டிராக்டர் ஓட்டுநராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெண்ணை நிகில் வழிமறித்து வாயை பொத்தி இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை வெளியே சொல்ல கூடாது என பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.