தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசுபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023 தேர்ச்சி போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் முகிலன், ஆறாம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா முதலிடம் பிடித்த சாதனை படைத்தனர்.

இதனையடுத்து ஏழாம் வகுப்பு மாணவன் இஷாந்த், முகமது இலியாஸ், ஐந்தாம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ஆசிய பசுபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி, பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.