தமிழக விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது அவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக எஸ்சி மற்றும் எஸ்டி விவசாயிகளுக்கு 100% மானியத்தோடு ஆள்துறை கிணறு அமைப்பதற்கான நீர் பாசன வசதி அமைத்துக் கொடுக்க உள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் தற்போது விவசாயிகளுக்கு ஆள் துணை கிணறு அமைக்கும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆழ்துளை கிணறு வசதியை மின்னோட்டார் உதவியுடன் அமைத்துக் கொடுப்பதற்கு எஸ்சி மற்றும் எஸ்டி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். சிறு மற்றும் குறு விவசாயிகள் எஸ்சி, எஸ்டி விவசாயிகள் வருவாய் துறையின் மூலமாக வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகள் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.