SBI உட்பட பிற வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் இருந்து இம்மாதம் 436 பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இதில், பயன்பெற சம்மதம் தெரிவித்திருந்தால், இத்தொகை உங்களுக்கு பிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆண்டு தோறும் மே மாதத்தில் இந்த தொகை எடுக்கப்படும்.

பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாவதால்  எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர். எனவே இதுகுறித்து அவ்வப்போது விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.