நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.  நாடு முழுவதிலும் இருந்து 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

இந்நிலையில் வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், தேர்வு மையங்களை கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் நிலைமையை நேரில் ஆய்வு செய்த பின் தேர்வை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒத்திவைத்த தேர்வுகள் பின் ஒரு நாளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.