காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு உத்திரவாதமின்றி இருப்பதாக ”Save the Children” தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்  என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைகள் சரிவர கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.