டைரக்டர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால் உட்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் மாரிமுத்து. அதோடு ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு திரைப்படங்களிலும் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூகவலைத்தளத்தில் 18+ கண்டெண்ட்டுகளை போடும் கணக்கு ஒன்றிலிருந்து, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு “Can I call you” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு மாரிமுத்துவின் பெயருடன் கூடிய கணக்கிலிருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, “yes” என பதிலளித்து மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அந்த நம்பர் ட்ரூ காலரில் தேடிப் பார்த்து அது அவரது நம்பர் என உறுதியானதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இதற்கு மாரிமுத்துவின் மகனான அகிலன் விளக்கமளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கமெண்ட் செய்து இருப்பது என் தந்தையின் அக்கவுண்ட் இல்லை. அவரது போன் நம்பர் ஏராளமானோருக்கு தெரியும். இதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தி உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த விளக்கத்துக்கு பிறகு அந்த போலி பதிவு நீக்கப்பட்டு உள்ளது.