டெங்கு, மலேரியா, கொரோனாவை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா உதயநிதி ஸ்டாலின் சந்தானம் குறித்து மென்மையாகத்தான் சொன்னார்.

ஆனால் நான் அப்படி சொல்லவில்லை. எச்ஐவி,  தொழுநோய் போல சனாதனம் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும்வினீத் ஜிண்டால் டெல்லி கமிஷனர் ஆப் போலீஸ் சஞ்சய் அரோராவிடம் ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் புகார் கொடுத்துள்ளார்.

முன்னதாக சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச த்தில் உள்ள சாமியார் உதயநிதி தலையை வீச விலை நிர்ணயித்தார். அவர் மீது சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.