சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் கோ.மு நகரில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி(35) என்பது தெரியவந்தது. சமையல் தொழிலாளியான பழனிச்சாமி எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.