மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்தியேந்திரனுக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சத்தியேந்திரன் விஷ இலையே தின்று மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சத்தியேந்திரன் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.