தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது சங்கர்தான். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பிரம்மாண்டத்தை காண்பிக்க தவற மாட்டார். இந்நிலையில் இயக்குனர் சங்கர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்‌.ஏ சந்திரசேகருக்கும் இடையேயான சண்டை குறித்து பேசி உள்ளார். இயக்குனர் சங்கர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சங்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது அவரின் வீட்டில் தான் அலுவலகம் இருந்தது. அப்போது ஒரு நாள் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.

அப்போது விஜய் சிறுவனாக இருந்தார். எஸ்ஏசி கோபமாக விஜயை படிக்கட்டில் இழுத்து சென்றார். இதைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டோம். அதன் பிறகு எஸ்ஏ சந்திரசேகரிடம் இது குறித்து நாங்கள் கேட்டோம். விஜய் ஊசி போடுவதற்கு வர மறுத்ததாகவும் அவரை வலுக்கட்டாயமாக காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார். நான் விஜய்க்கு சிறுவனாக நடிப்பு பற்றி கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால் பின்னால் இவ்வளவு பெரிய நடிகராக மாறுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் சங்கரின் பேட்டி தற்போது வைரலாக்கி வரும் நிலையில் நண்பன் படத்தில் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.