விழுப்புரம் அருகே மதுபான பாட்டிலின் உள்ளே கரப்பான் பூச்சி இருந்தது வீடியோ எடுத்து கருத்து தெரிவித்த குடிமகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மது கடை இயங்கி வருகின்றது.

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அக்கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவர் அந்த மதுபான கடையில் மதுபானம் வாங்கியுள்ளார். அப்போது சீழ் பிரிக்கப்படாத மது பாட்டிலினுள் கரப்பான்பூச்சி இருப்பதை கண்ட இளைஞர் பாட்டிலை வீடியோ எடுத்துக் குடிமகன்களுக்கு கருத்தை சொல்லிவிட்டு அதே கடையில் சென்று வேறொரு மது பாட்டிலை கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.