மழை நிவாரண பணிகளுக்காக 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

முன்னதாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் கோரப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.  முன்னதாக நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்க ஐந்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று கோரிக்கையை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.  அதில் முதல்கட்டமாக 5060 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று தன்னுடைய கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.