செய்தியாளர்களை சந்த்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், TET தேர்ச்சியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். குழுவிடமிருந்து மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று முதலமைச்சர் கவனத்தில் கொண்டு   செல்லப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 12,500 ஆக உயர்த்தப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூபாய் 10  லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு தொகையை தமிழக அரசே செலுத்தும். ஆசிரியர்கள் போராட்டம் குறித்த தகவல்களை முதலமைச்சர் கேட்டு அறிந்து கொண்டே தான் இருக்கிறார். ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜேசுராஜா, அரசின் அறிவிப்பு திருப்தி அளிக்கவில்லை. எங்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றுவார்கள் என்கின்ற நம்பிக்கையோடு இந்த போராட்ட களத்திலேயே காத்திருக்கின்றோம். போராட்டம் தொடரும்.181 தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது.

சொன்னதை செய்வார் என்ற தமிழக முதல்வரின் வாக்கு பொய்க்காது என்று நாங்களும் நம்புகின்றோம்.  நிதிநிலை என்று சொல்கின்ற காரணத்தினால் தான் அடுத்த நிலைக்கு எங்களை முழு நேர ஆசிரியர்களாக  மாற்றி சமுதாயத்தில் எங்களுக்கு ஒரு மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அந்த முழு நேர ஆசிரியர் ஆக்குவதற்கான மறுப்பு தெரிவிக்கின்றார்.

எனவே இவர்கள் மீதான  நம்பிக்கையை பொய்த்துவிடும் போல் இருக்கிறது.  எங்களுக்கு முழு நேர பணி அறிவிக்க வேண்டும். பகுதி நேரம் என்ற நிலையிலிருந்து மாற்றி அடுத்த நிலைக்கு முழு நேர பணி வழங்கப்பட வேண்டும். அது ஓராண்டு கால தற்காலிக தீர்வாக இருக்கப்பட வேண்டும்.  ஓராண்டுக்கு பிறகு அவர்கள் பணி நிரந்தரம் என்ற நிலையை அடைய வைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் என தெரிவித்தார்

அதே போல TET ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் இளங்கோவன் பேட்டி, தமிழக அரசு இப்படியே செய்து கொண்டிருந்தால் எங்களுக்கு வேதனையின் உச்சம் தான் இருக்கும்.  அதனால எங்களது போராட்டத்தை இன்னும் வலுப்பெற்று மிக தீவிரமாக எங்களது போராட்டம் தொடரும் என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கின்றோம். ஆசிரியர்களுக்கான அறிவிப்பு மாலை வரும் என சொல்கிறார்கள். எங்களை  ஆசிரியர்கள் என்றாவது அறிவியுங்கள், அப்படின்னு தான் நாங்கள் சொல்றோம்.

எங்களைப் பொருட்படுத்தவே இல்லை, இதுதான் எங்க வேதனை. 149யை ரத்து செய்துவிட்டு,  ஏற்கனவே கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தது… அதுவும் தளபதியார் சொன்னது போல,  வேலைவாய்ப்பு அலுவலக அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிதி இல்லைன்னு சொல்றீங்க. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் எங்களுக்கு பணி வழங்குங்கள்.  அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னாலும் சரி, கரும்பலகை சுத்தம் செய்ய சொன்னாலும் சரி, தயாராக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம். அதற்கும் மனம் இறங்கவில்லை என்றால் ? எதற்காக இளைஞர்களை இப்படி வாட்டி வதக்குகிறீர்கள் என்று தெரியவில்லை. போராட்டம் இன்னும் தீவிரமாக தொடரும் என தெரிவித்துள்ளார்.