குஜராத்தில் உள்ள சூரத் ரயில்வே நிலையத்தில் ரயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் இருந்து வேகமாக ஓடி வந்த இரண்டு பெண்கள் அவசரமாக ரயிலில் ஏற முயற்சி செய்தார்கள். அப்போது ஒருவர் திடீரென தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழ சென்றார்.

இதைப் பார்த்த RPF அரவிந்த் குமார் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை காப்பாற்றினார். ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே விழச்சென்ற பெண்ணின் உயிரை நூலிழையில் காப்பாற்றிய ஆர்பிஎஃப் வீரருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் இது தொடர்பான வீடியோவை ஆர்பிஎஃப் இந்தியா தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.