சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வருகின்ற 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது. இஸ்ரோ அமைப்பு பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

இது தவிர வணிக ரீதியாகவும் இஸ்ரோ அமைப்பு வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் தான் சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது. மேலும் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏப்ரல் 22-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.